விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில் ஆழ்வார்கள் அருளிச் செயலிலிருந்து தொகுத்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 4வது பகுதி 4. திருமக ளார்தனிக் கேள்வன் அருள்க;பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க;ஆலி னிலைப்பெரு மானே அருள்க;மால்விடை ஏழ்செற் றவனே அருள்க;தெள்ளிய சிங்கம் அருள்க; கொள்ளைகொள்ளிக் குறும்பன்அருள்க; யார்க்கும்அறிவரு மாயன்அருள்க; ஏழேழ்பிறவி யறுப்பான் அருள்க; இமையவர்தந்தைதாய் அருள்க; தவமுனி அருள்க; 610எந்தையே அருள்க; ஏற்பரன் அருள்க;ஒடியா இன்பப் பெருமையன் அருள்க;படுகடல் அமுதே அருள்க; பத்தர்கள்நுகர்கனி அருள்க; நூல்மார்ப அருள்க;பகல்க ரந்தச்சுடர் ஆழியான் அருள்க;ஆயர் பாடிவிளக்கே அருள்க;வாய்முதல் அப்பன் அருள்க; வானவர்புகலிடம் அருள்க; புள்வலான் அருள்க; 621.வகையால் அவனி இரந்தான் அருள்க;எங்கள்செல் சார்வே அருள்க; வடிவார்சங்கம் கொண்டான் அருள்க; உலகுய்யநின்றான் அருள்க; நெடியோன் அருள்க;குன்றே குடையா எடுத்தான் அருள்க;மழுவியல் படையான் அருள்க; வேதாந்தவிழுமிய பொருளான் அருள்க; வேதமுதற்பொருள் அருள்க; முனைவன் அருள்க; 631.மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க;வானவர் கொழுந்தே அருள்க; மூவாவானவன் அருள்க; வாசுதேவன் அருள்க;வண்ணம் அழகிய நம்பி அருள்க;எண்ணில் மூர்த்தி அருள்க; என்னுயிர்க்காவலன் அருள்க; காகுத்தன் அருள்க;கோவிந்தன் அருள்க; கோவர்த்தன் அருள்க; 641.சாமவேதியன் அருள்க; செய்யதாமரைக் கண்ணன் அருள்க; தாமரைத்தாளான் அருள்க; தாசரதி அருள்க;தோளா மாமணி அருள்க; தொண்டர்க்குஇனியான் அருள்க; இருடிகேசன் அருள்க;பனிமல ராள்வலம் கொண்டான் அருள்க;கோல வராகன் அருள்க; கருமுகில் 650போலும் உருவன் அருள்க; தொழுவார்சிந்தை பிரியான் அருள்க; சேதுபந்தம் திருத்தினான் அருள்க; பத்தர்க்குஅமுதே அருள்க; அளப்பில்ஆ ரமுதைஅமரர்க் கருளும் விளக்கே அருள்க;நரனே அருள்க; நந்தகோ பன்இளவரசே அருள்க; ஜம்பால் ஓதியைஆகத்து இருத்தினான் அருள்க; கடலுள்நாக மேந்தித் துயின்றான் அருள்க; 660நாந்தக மேந்திய நம்பி அருள்க;கூந்த லார்மகிழ் கோவலன் அருள்க;குறியமா ணெம்மான் அருள்க; கூந்தல்வாய்நெறியக் கீண்டான் அருள்க; நெறிமையால்நினையவல் லார்கதி அருள்க; தன் அடியார்க்குஇனியான் அருள்க; எனக்கரசு அருள்க;துத்திசேர் நாகத்து அணையான் அருள்க;அத்தம் அடுத்த பத்தாம் நாளில்தோன்றினான் அருள்க; மூன்றினில் தோன்றிமூன்றினில் மூன்றுரு வானான் அருள்க;பாற்கடல் வண்ணன் அருள்க; சங் கோதப் 670பாற்கடல் சேர்ப்பன் அருள்க; சார்ங்கவில்கையன் அருள்க; கன்னல் அருள்க;வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம்வில்லும் ஏந்துவோன் அருள்க; வீயாமல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க;ஞானப் பிராஅன் அருள்க; பரி முகமாய்ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க;வெற்றிக் கருடக் கொடியோன் அருள்க;கற்றைக் குழலான் அருள்க; விடமுடைப்பாம்பின் மேல்நடம் பயின்றான் அருள்க; 680ஆமகிழ்ந் துகந்தவை மேய்ப்பான் அருள்க;மும்மை மூர்த்தி அருள்க; இவ்வுலகில்எம்மாண்பு மானான் அருள்க; என்னுடை நாயகன் அருள்க; நான்மூர்த்தி அருள்க;வேய்ங்குழ லூதும் வித்தகன் அருள்க;ஆழியொன் றேந்தியே கூற்றே அருள்க;ஊழி பெயர்த்தான் அருள்க; ஒருநல்சுற்றம் அருள்க; சுற்றுநின் றகலாஉற்றார் இலாத மாயவன் அருள்க; 690உணவுப் புள்ளேறி ஊர்வான் அருள்க;அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க;அறிவினுக் கரிய பிரானவன் அருள்க;குறிய மாணுருக் கூத்தன் அருள்க;ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க;ஒதம் போல்கிளர் வேதநீரன் அருள்க;ஆவிக் கொருகொள் கொம்பே அருள்க;கோவி நாயகன் அருள்க;கூரார்ஆழிபணி கொண்டவன் அருள்க;பிறவிகள்ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க; 700தோற்றக் கேடவை இல்லவன் அருள்க;ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க;இம்மைக் கும்மினி ஏழேழ் பிறவிஅம்மைக் குங்கதி யாவான் அருள்க;இமையோர்க் கரிய அப்பன் அருள்க;இமையோர் நாயகன் அருள்க; இமையோர்பெருமான் அருள்க;பெரியான் அருள்க;அருமா மறைப்பண் ணகத்தான் அருள்க;இலங்கு சோதியன் அருள்க; மதிள்நீர்இலங்கை மானகர் பொடித்தான் அருள்க; 710இருளன்ன மேனியான் அருள்க; சகடம் உருள உதைத்தான் அருள்க; இன்னமுதவெள்ளம் அருள்க; விமலன் அருள்க;பள்ளிமா மாயன் அருள்க; பற்றிலார்பற்றநின்றவன் அருள்க; மூவுலகும்முற்ற விரிசுடர் முடியன் அருள்க;இன்னப்பா அருள்க; இன்பவாறு அருள்க;பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க;ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க; 721தேட்ட ருந்திறல் தேனே அருள்க;உணர்வினிக் கரியான் அருள்க; இருப்பிணிஅணிநெடுந் தோள்புணர்ந் தவனே அருள்க;உலகு செய்பவன் அருள்க; ஏழுசேர்உலகம் ஆண்டவன் அருள்க; உலகேழும்புகக்க ரந்ததிரு வயிற்றான் அருள்க;மகர நெடுங்குழைக் காதன் அருள்க;எண்ணற் கரியான் அருள்க; கருமுகில்வண்ணன் அருள்க; வரம்புக் கடங்காக் 730கீர்த்தியான் அருள்க; கேடிலா உணர்வின்மூர்த்தியான் அருள்க; முற்ற மண்ணிடம்தாவிவிண் ணுறநீண் டளந்தான் அருள்க;ஓவரி வெஞ்சிலை வலவன் அருள்க;உயர்வினை யேதரும் ஒண்சுடர் அருள்க;உயர நின்றதோர் சோதீ அருள்க;எளிவரும் இயல்வினன் அருள்க; ஞாலம்அளந்திடந் துண்ட அண்ணல் அருள்க;ஞாலம் தத்தும் பாதன் அருள்க;ஞாலமுண் டுமிழ்ந்த மாஅல் அருள்க; 740உம்பர் கோமான் அருள்க; துழாய்முடிநம்பெரு மானே அருள்க; இலனதுஉடையன் இதுவென நினைவரியான் அருள்க;விடையேழ் வீயப் பொருதான் அருள்க;மாகத் திளமதி சேர்சடை யானைப்பாகத்து வைத்தான் அருள்க; ஞானத்தால்ஆகத்து அனைப்பார்க்கு அருள்வான் அருள்க;நாகத் தணையான் அருள்க; நற்பலதாமரை நாண்மலர்க் கையவன் அருள்க;தாமரை மின்னிடை நாகன் அருள்க;என்றும் இனியான் அருள்க; பலவென 750ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க;என்னுடைச் சுற்றம் அருள்க; தொண்டர்க்கின்னருள் புரிவோன் அருள்க; எந்நின்றயோனியு மாகிப் பிறந்தவன் அருள்க;ஞானத் தின்னொளி உருவன் அருள்க;ஏறு சேவகன் அருள்க; அன்றிலங்கைநீறு செய்த வீரன் அருள்க; எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க;நல்லன நமக்கே தருவான் அருள்க;எண்ணில் தொல்புக ழீசன் அருள்க; 760நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க;குரங்கையா ளுகந்த கோமான் அருள்க;விரிந்த புகழான் அருள்க; கைகழாலநேமியான் அருள்க;நேசன் அருள்க;மாமணி வண்ணன் அருள்க; சோத்தம்பிரானவன் அருள்க; பெம்மான் அருள்க;சராச ரத்தைவீ டேற்றினான் அருள்க;எழிலேறு அருள்க; ஏகமூர்த்தி அருள்க; 771தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க;முனிவர்க் கருள்தரும் தவமே அருள்க;தனியேன் வாழ்முதல் அருள்க; வானுளார்அறிய லாகா வானவன் அருள்க;நிறைமூ வுலகுக்கும் நாயகன் அருள்க;எள்க லிராக மிலாதான் அருள்க;உள்கலந் தார்க்கோர் அமுதே அருள்க;கொள்கை கொளாமை யிலாதான் அருள்க;அளிநன் குடையான் அருள்க; எண்மீ 780தியன்ற புறவண் டத்தான் அருள்க;மயங்கச் சங்கம்வாய் வைத்தான் அருள்க;என்குல தெய்வம் அருள்க; அசுரர்வன்குலம் வேர்மருங் கருத்தான் அருள்க;கூனேறு சங்கம் இடத்தான் அருள்க;கூனே சிதையவில் தெறித்தான் அருள்க;கோமளப் பிள்ளை அருள்க; அந்தணர்ஓமம் ஆனான் அருள்க; ஓமத்துஉச்சியான் அருள்க; உயிராளன் அருள்க; 790பச்சைமா மலைபோல் மேனியன் அருள்க;அனைத்துல கும்விளக்கும் சோதீ அருள்க;புனத்துழாய் மாலையான் அருள்க; பொறியுணர்வகையிலான் அருள்க; ஐவர் தூதனாய்ச்சவையில் சென்ற மாயனே அருள்க;துற்றி யேழுல குண்டவன் அருள்க;கொற்றவன் அருள்க; குழலழகன் அருள்க;கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க;படியிது வெனலாம் படியலான் அருள்க; 800. 5ஆவது இறுதிப் பகுதி "செயசெய" (801 -1008 நாமங்கள்) தொடரும் பகிர்FacebookXLike ஏற்றப்படுகின்றது...
Excellent contribution. This will help those who are not familiar with Sanskrit sahasranamam. மறுமொழி
Excellent contribution. This will help those who are not familiar with Sanskrit sahasranamam.
I am waiting for the last instalment in this series